Wednesday, May 8, 2024

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Must Read

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பேரறிவாளன் உடல்நிலை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில் இவருக்கு மேலும் இரண்டு வாரம் பரோல் வழங்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

மனுதாக்கல்

ஜோலார்பேட்டையை சேர்ந்த பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொன்ற கொலை வழக்கில் கைது ஆனார். பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த அக்டோபர் மாதம் இவரது தயார் அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு ஏற்பட்ட சிறுநீரக பிரச்சனையின் காரணமாக இவருக்கு பரோல் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

perarivalan
perarivalan

இவரது மனுவை ஏற்றும், பேரறிவாளனின் உடல்நிலையை கருத்தில் கொண்டும் இவர்க்கு 45 நாட்கள் பரோல் வழங்கியது உச்சநீதிமன்றம். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் கடந்த 28 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்து வந்துள்ளதாக தகவல் மூலம் தெரிய வருகிறது.

பரோல் நீட்டிப்பு

சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 45 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. இன்றுடன் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் முடிவடைகிறது. பேரறிவாளனின் உடல்நிலையில் மாற்றம் ஏதும் ஏற்படாத நிலையில் மேலும் 2 வாரம் பரோலை நீட்டித்து உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

perarivalan arrest
perarivalan arrest

சிகிச்சையின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பேரறிவாளன் விடுத்த மறுவிசாரணை மனுவையும் உச்சநீதிமன்றம் 2021 ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -