தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம், சரியாக வழங்கவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி குற்றச்சாட்டு பதிவு செய்து இருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.
“குக் வித் கோமாளி 5” பிரியங்கா முதல் பூஜா வரை.. இணையத்தில் கசிந்த போட்டியாளர்களின் சம்பள பட்டியல்!!
அதில் “விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி வீடுகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. உயர் மின் கட்டமைப்புகளில், அவ்வப்போது இடையூறுகள் ஏற்படுவதால், ஒரு சில நேரங்களில் தாமதமாகிறது. ஆனாலும் இடையூறுகளை சரி செய்து மின்சாரம் வழங்க போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகிறது.” என அமைச்சர் பதில் அளித்துள்ளார்.