பொதுவாக மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு மிரட்டல் விடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. அதாவது குஜராத் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இ – மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தமிழக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2024.. ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!
இதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் மாணவ – மாணவிகள் பாதியில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சமீபத்தில் டெல்லியில் உள்ள ஏராளமான பள்ளிகளுக்கு இ – மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.