செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது, வாதங்களை முன்வைக்க அமலாக்கத்துறை 5 நாட்களை அவகாசம் கோரியதால் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் மே 15க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.