தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானோர் முக்கிய சுற்றுலா தலங்களுக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில், எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் கடல் சீற்றம் அடையும் நிகழ்வான ‘கள்ளக்கடல்’ நிகழ்ந்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சும்மா சும்மா யாரும் என்ன குறை சொல்ல வேண்டாம்.., அடிக்கிற வெயிலுக்கு ஜில்லுனு மீம்ஸ் வைரல்!!
இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முத்தம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் அதிகளவில் காணப்படுகிறது. எனவே மீனவர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும், கடலுக்குள் இறங்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.