தமிழகத்தில் 2023-24ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று (மே 6) காலை 09.30 மணி அளவில் அதிகாரப்பூர்வ தளத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்ச்சி விகிதம் 90 சதவீதத்திற்கு மேல் உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் பெருமிதம் தெரிவித்துள்ளனர். அதன்படி கடந்தாண்டில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2024.. ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!!
குறிப்பாக அரசுப்பள்ளிகளில் 91.32 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 95.49 சதவீதம் என தேர்ச்சி விகிதம் உள்ளது. அதேபோல் கணினி அறிவியல், வேதியியல், விலங்கியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்ச்சி பெற்றுள்ளனர்.