மத்திய அரசு ஊழியர்களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8 வது ஊதியக்குழு எப்போது? அமைக்கப்படும் என ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த சூழலில் 8 வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) மத்திய அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளது.
TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2
அதில் மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய வேறுபாடு மற்றும் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய, 8வது ஊதியக்குழு உடனடியாக அமைக்க வேண்டும். மேலும் அகவிலைப்படி உயர்வு மற்றும் ஊதிய திருத்தம், பதவி உயர்வு செயல்முறை, பணி நிலைமைகள் உள்ளிட்ட அனைத்து கொள்கைகளையும் மறுபரிசீலனை செய்ய ஊதியக்குழுவுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். எனவே மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு, ஆட்சி அமைக்கும் புதிய அரசின் முதல் பணியாக 8 வது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.