தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். அதன்படி இன்று (மே 4) திருவள்ளூர் மாவட்டம் புழல் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி செய்ய உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கொல்கத்தா அபார வெற்றி.. 12 வருடங்களுக்கு பிறகு மும்பையை சொந்த மண்ணில் வீழ்த்தி அபாரம்!!
இதன் காரணமாக விநாயகபுரம், புழல், சூரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின் தடை செய்யப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளனர். பராமரிப்பு பணி நிறைவடைந்தவுடன், மின் நுகர்வோர்களுக்கு மின்சாரம் சீராக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.