தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கரூர் பரமத்தியில் இதுவரை இல்லாத அளவாக 111.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவு ஆகியுள்ளது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கடும் வெயில் காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 2 நாட்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக அசெளகரியம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.