தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

0
தமிழக இடைநிலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான தகுதித் தேர்வு ரத்து? கல்வித்துறைக்கு பரந்த கோரிக்கை!!!

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணிபுரிபவர்களுக்கு ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு வழங்க வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதி தேர்வை நடத்தி, அதன் மூலம் தகுதி பெறுபவர்களுக்கு பதவி உயர்வு வழங்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு முக்கிய கோரிக்கை கடிதம் எழுதி உள்ளது.

தமிழகத்தில் வெப்ப அலை தொடரும்..  வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.. பயத்தில் மக்கள்!!

அதில் இடைநிலை ஆசிரியர்களின் பணி மூப்பின் அடிப்படையில் பட்டியலை தயாரித்து, அவர்களுக்குள்ளாகவே ஒரு தேர்வை நடத்தி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கோரிக்கை தொடர்பான அறிவிப்பு, கூடிய விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here