தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை பொது தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஆனாலும் பொதுத்தேர்வு முடிவுகளை பொறுத்து, அடுத்தகட்ட உயர் படிப்பிற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிட தயார் நிலையில் இருப்பதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.
மக்களவை தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், தேர்வு முடிவு வெளியிடுவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் உரிய அனுமதி கேட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த தகவல் மாணவர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!