7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து மற்ற கொடுப்பனவுகளும் உயர்த்தப்படுமா? என ஊழியர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50 சதவீதமாக உயர்த்தியதன் மூலம் விடுதி மற்றும் குழந்தைகளின் கல்வி உதவித்தொகை மானியங்கள் 25 சதவீதம் வரை திருத்தப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். மேலும் அது தொடர்பான நிலுவை தொகையும் வழங்கப்படும் எனவும் கூறி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.