தமிழகத்தில் இலலதரசிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை விரிவுபடுத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டுள்ளது. தேர்தல் காரணமாக புது ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் தேர்தல் விதிகளில் தளர்வு ஏற்பட்ட பின்பு தான் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். அதன் பின்னரே அதற்கு விண்ணப்பிக்க முடியும். தேர்தல் முடிவு வெளியான பின்பு ஜூன் 2 ஆம் வாரத்தில் தான் தான் விண்ணப்பங்கள் ரிலீஸ் செய்யவுள்ளனர். மேலும் ஜனவரி மாதத்தில் மகளிர் உரிமை தொகை கூடுதல் இல்லத்தரசிகளுக்கு வழங்கப்பட்டது. அதே போல தான் இந்த ஜூன் மதத்திற்கு பிறகு மேலும் இல்லத்தரசிகள் இந்த திட்டத்தில் இணைக்கப்படுவார்கள்.
மறுவாழ்வு மையங்களில் இருக்கும் பெண்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு உரிமைத்தொகை திட்டம் வழங்கப்படாமல் இருந்த நிலையில் அவர்களுக்கும் தற்போது வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதே போல கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிக்கும் இந்த உரிமைத்தொகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.