IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் மிகக்கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டி மிக சுவாரசியமாக உள்ளது. தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராஜஸ்தான் அணி 7 வெற்றியுடன் கம்பீரமாக உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 2 அல்லது 3 வென்றால் போதும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்று விடும்.
பள்ளி மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்க வேண்டும்…, முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு!!
அதனைத் தொடர்ந்து கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இதில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் நல்ல பார்மில் உள்ளன நடப்பு சாம்பியன் சென்னை, டெல்லி மற்றும் முன்னாள் சாம்பியன் குஜராத் இம்மூன்றும் 4 வெற்றிகளுடன் உள்ளன. இதில் சென்னை அணி சற்று சறுக்கலை சந்தித்தாலும் மற்ற அணிகள் ஏறுமுகத்தில் உள்ளன. எஞ்சிய போட்டிகளில் வெற்றிகள் பெற்றாலே போதும் என்பதால் இவற்றிற்கும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.