பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஒரு சில வங்கிகள், வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் போது, கூடுதல் கட்டணம் மற்றும் நியாயமற்ற வட்டியை வசூலிப்பதாக புகார் வந்துள்ளது.
இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன்னதாகவே வட்டி, கட்டணம், பணப் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வங்கிகள் முழுமையாக எடுத்துரைத்திருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் எவ்வித முறைகேடுகளும் நடக்காது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.