தமிழகத்தில் தற்போது பொதுத்தேர்வு முடிந்த நிலையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை முடிந்த பிறகு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வரும் ஜூன் 3ம் தேதி முதல் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 2
ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல்கள் உலா வந்தன. இந்த சூழலில் பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழக அரசு அறிவித்துள்ள கோடை விடுமுறையை மீறி எந்த பள்ளியிலும் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது. மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.