விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசன் இனிதே தொடங்கிய நிலையில் அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளது. செப் வெங்கட் பட் இதில் கலந்து கொள்ளாதது தான் பலரையும் ஏமாற்றத்திற்குள்ளாகியது.
மேலும் அவர் சன் டிவியில் இதே போல சமையல் கலந்த காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார். அதற்கான அதிகாரபூர்வ ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்தது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் இப்பொழுது மாதம்பட்டி ரங்கராஜன் குக் வித் கோமாளி சீசன் 5 யில் நடுவராக வந்ததற்கான ரகசியம் கசிந்துள்ளது.
அதாவது, பிரியங்கா எப்படி சார் இந்த கோமாளிகளை ஹாண்டில் பண்ண ஒத்துக்கிட்டிங்க ரொம்ப கஷ்டமாச்சே என்று கேட்க.., அதற்கு மாதம்பட்டி ரங்கராஜன் நீங்க வரதா சொன்னாங்க ஓகே னு ஒத்துக்கிட்டேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.