கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்த அரசு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் கோவிஷீல்ட் நிறுவனம் இந்த மருந்தால் ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுகள் குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்திருந்தது.
தமிழக அரசு மாணவர்களே.., விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!
இதையடுத்து நாடு முழுவதும் எதிர்ப்புகள் அதிகரித்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை திரும்ப பெற்றுள்ளது. அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதை ஒப்புக் கொண்டதோடு உலகம் முழுவதும் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை திரும்பப்பெற்றது அஸ்ட்ராஜெனிகா நிறுவனம். மேலும் இந்நிறுவனத்திடம் ரூபாய். 7500 கோடி இழப்பீடு கோரி பிரிட்டனில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.