தமிழகத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், “கலைஞர் மகளிர்” திட்டத்தின் மூலம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தவுடன், இத்திட்டத்தில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள் என அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பலரும் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையம் to கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் சேவை., வெளியான மாஸ் தகவல்!!!
அந்த வகையில் இம்மாத இறுதியில் புதிய விண்ணப்பங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து கலைஞர் மகளிர் திட்டத்தில், கூடுதலாக 2.30 லட்சம் குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும், இதில் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமை தொகை கிடைப்பதற்கான ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.