சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் நாளுக்கு டிஆர்பி ரேட்டிங்கில் சரிந்து கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். தர்ஷினியின் திருமணத்தை மையமாக வைத்து கதையை நகர்த்தி வந்தனர்.
அந்த ட்விஸ்ட்டும் இப்பொழுது எண்டுக்கு வந்த நிலையில் அடுத்ததாக குணசேகரன் ஈஸ்வரியின் விவாகரத்து குறித்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. என்ன தான் கதைக்களத்தை கொண்டு வந்தாலும், முன்பு இருந்த எதிர்நீச்சல் சீரியல் இது கிடையாது என்று தான் சொல்ல வேண்டும்.
மாரிமுத்து இறந்த பிறகு சீரியலே படுத்து விட்டது. புதுப்புது கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்தாலும் அதில் எந்த ஒரு பிரோயோஜனமும் இல்லை. மேலும் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் ஸ்ட்ராங்காக கொண்டு வந்தால் தான் சீரியல் அடுத்து டிஆர்பி ரேட்டிங்கில் எகிறும்.