தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக் இன்னும் சில மணி நேரங்களில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள், தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.