தமிழகத்தில் காவல் பணி மிகவும் மதிப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினரை மறந்து பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும் தமிழகத்தில் சில பகுதிகளில், கடந்த 3 நாட்களாக காவல்துறையினர், அரசு பேருந்து டிரைவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல்.. கோழிக்கறி, முட்டைகள் விற்பனைக்கு தடை!!
அதில், அரசு பேருந்துகளில் காவலர்கள் இலவசமாக பயணிப்பது குறித்து அரசாணை வெளியிட வேண்டும். காவலர்கள், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இடையே மோதலை தவிர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அரசுத்துறை உயர் அதிகாரிகளின் அலட்சியத்தால் களத்தில் இரு துறையினர் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறி தனது கருத்தை முடித்துள்ளார் .