பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம் . அந்த வகையில், கடந்த 4 தினங்களுக்கு முன்னதாக கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று மனிதர்களுக்கு பறவை வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/Pic-11-3-1.jpg)
அதன்படி ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. தற்போதைய தொடர்ந்து கோட்டயம் மாவட்டத்துக்கும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக கூறப்படுகிறது . இதன் விளைவாக வருகிற 29ம் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துக்கள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே.. நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.. அரசு அறிவிப்பு!!