மாநிலத்தில் தீயாய் பரவும் பறவை காய்ச்சல்.. கோழிக்கறி, முட்டைகள் விற்பனைக்கு தடை!!

0
பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம் . அந்த வகையில், கடந்த 4 தினங்களுக்கு முன்னதாக கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று மனிதர்களுக்கு பறவை வாய்ப்பு இருக்கிறது என்று கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆலப்புழா மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. தற்போதைய தொடர்ந்து கோட்டயம் மாவட்டத்துக்கும் பறவை காய்ச்சல் பரவி உள்ளதாக கூறப்படுகிறது . இதன் விளைவாக வருகிற 29ம் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துக்கள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here