தமிழக அரசு ரேஷன் அட்டைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல உணவுப் பொருட்களை வழங்கி வருவதை நாம் அறிவோம். இது தவிர பண்டிகை காலங்களில் போது அவர்களுக்கு பரிசு தொகுப்பு மற்றும் பல சலுகைகளை ரேஷன் கடை ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பொது மக்களுக்கு வழங்குகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/1lk_kl-1068x641-1-1024x615.jpg)
அதில், மே மாதத்துக்கான சிறப்பு பொது விநியோக திட்டப் பொருள்களை உரிய காலத்துக்குள் வழங்க வேண்டியுள்ளது. இது கருத்தில் கொண்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலை கடைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!