IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 2வது Qualifier போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில் இப்போட்டிக்கு பிறகு SRH அணி சுழற் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அஹமத் கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
அதில், தற்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை கோப்பையை வென்ற பின் கொண்டாட்டங்களை தொடங்குவோம். இப்போதைக்கு சிறிது ஓய்வு மற்றும் அடுத்த சவாலுக்கு தயாராவதில் எங்கள் முழு கவனம் உள்ளது என்று தெரிவித்தார். இவர் இதை RCB அணி வீரர்களை அவமானப்படுத்துவதற்காக தான் கூறியுள்ளார் என்று ஒரு பக்கம் பெங்களூர் ரசிகர்கள் இவருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.