பிரதமர் மோடி நாடு முழுவதும் அவ்வப்போது சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடகா வனத்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது மைசூருவில் உள்ள ரேடிசன் ப்ளூ பிளாசா நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்கி இருக்கிறார்.
காவலர்களுக்கு இலவச பயணம்.. அரசாணையை வெளியிடுக.. தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!
இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணத்தில், ரூபாய் 80 லட்சம் பாக்கியை ஓராண்டாக செலுத்தவில்லை என ஹோட்டல் நிர்வாகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. மேலும் வாடகை பாக்கியை செலுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.