இந்தியாவில் ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இந்த நிலையில் வரும் மே 26ம் தேதி நடைபெற உள்ள இத்தொடரின் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தற்போது இப்போட்டி குறித்து ஓர் சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 8
அதாவது டி20 உலக கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களில் ஒருவர் கூட IPL இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளில் இல்லை. அணியில் கூடுதல் வீரராக சேர்க்கப்பட்ட ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.