தமிழகத்தில் பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை, போக்குவரத்துக் கழகங்கள் அறிமுகம் செய்து வருகின்றனர். அந்த வகையில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, அரசு பேருந்துகளில் யுபிஐ மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை அமலுக்கு கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி தற்போது அரசு விரைவு போக்குவரத்திற்கு சொந்தமான 1,068 பேருந்துகளில், பயணிகள் யுபிஐ மூலம் டிக்கெட் பெறலாம் என அறிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த 3 ஆண்டுகளில், படிப்படியாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் விரிவுபடுத்தப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இது பயணிகள், நடத்துனர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக இல்லத்தரசிகளே.., மளமளவென சரிந்த காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??