தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக (மே 7) 12 மாவட்ட பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3
அதன்படி விருதுநகர், தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.