நாடு முழுவதும் 2 ஆம் கட்டத்தை தொடர்ந்து 3 ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு, இன்று (மே 7) நடைபெற்று வருகிறது. இதில் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13ஆம் தேதி 4 ஆம் கட்ட மக்களவை தேர்தல் மற்றும் செகந்திராபாத் கண்டோன்மெண்ட் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு மே 13ஆம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4 ஆகிய இவ்விரு தினங்களிலும், ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தெலுங்கானா மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.