தமிழகத்தில் இயற்கை சூழலை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம், நீலகிரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மது வாங்குவோரிடம் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூல் செய்யப்பட்டு, திரும்ப பெறும் போது கூடுதல் தொகை ரூ.10 திருப்பி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
அப்போது மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ரூ.306.32 கோடி வசூல் செய்யப் பட்டுள்ளதாகவும், காலி மதுபாட்டில்களை திருப்பி கொடுத்ததன் மூலம் ரூ.297.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.