காமெடி கலைஞராக மக்கள் மனதில் தற்போது வரை நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக வடிவேலுவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. இதனால் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்தார்.
ஆனாலும் வடிவேலுவின் மவுசு மட்டும் குறையவே இல்லை. மீம்ஸ், ரீல்ஸ் என அவரது காமெடி முழுக்க பரவி கொண்டே தான் இருந்தது. இப்படி இருக்க சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற படங்களில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். ஆனாலும் முன்பு இருந்த வடிவேலு மிஸ்ஸிங் என்று தான் சொல்ல வேண்டும்.
மாமன்னன் படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதன் பிறகு அவருக்கு எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் அவர் சின்னத்திரையில் களமிறங்க இருப்பதாக செய்திகள் வலம் வருகிறது. பிரபல தொலைச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், அதற்கு ரூ.1 கோடி கொடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.