பாக்கியலட்சுமி சீரியல் சமீப காலமாகவே சுவாரசியம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் இதனை விறுவிறுப்பாக்கும் விதமாக ராதிகாவின் கர்ப விஷயத்தை லீக்அவுட் செய்துள்ளனர். இதனால் வீடே கொந்தளித்து கொண்டுள்ளது.
செழியன், இனியா, எழில் சேர்ந்து கோபியை வீட்டை விட்டு வெளியேற சொல்கின்றனர். இது கோபிக்கு பெரிய ஷாக் தான். இதனை வைத்து பார்க்கும்போது கதையை முடிக்க போகிறார்களா? அல்லது தொடர போகிறார்களா? எனபதே குழப்பமாக உள்ளது.
ஏனெனில் பழனிச்சாமி வேறு ஒரு பக்கம் பாக்கியாவை காதலித்து வருகிறார். இரண்டு பக்கமே பலமாக கதை உள்ளதால் கண்டிப்பாக சில சில நாட்கள் கதையை ஓடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சீரியல் இப்போதைக்கு முடிவுக்கு வருவது என்பது சாத்தியமில்லாத ஒன்று.