தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை நாட்களின் போது மக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்குவது வழக்கம். அந்த வகையில் இன்று (மே 14) வேலூரில் குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் சிரசு திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்தும் எக்கச்சக்கமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
![](https://enewz.in/wp-content/uploads/2024/05/locasl-22-1-1024x614.jpg)
இதனை கருத்தில் கொண்டு இன்று (மே 14) வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜூன் 22-ல் அரசு அலுவலர்களுக்கும், ஜூன் 23-ல் அச்சக பணியாளர்களுக்கும் வேலை நாளாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.