நாடு முழுவதும் பல கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸாப்ப், ஸ்புக், இன்ஸ்டா போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனாளர்களின் வசதிக்கேற்ப அந்தந்த நிறுவனம் பல பல புது அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது மெட்டா நிறுவனம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள WhatsApp, Facebook மற்றும் Instagram பயனர்கள் இப்போது Meta AI சாட்போட்டை அணுகலாம். இது படங்களை உருவாக்கவும், வினாகளுக்கு பதிலளிக்கவும், உணவகம் மற்றும் பலவற்றை விரைவாக தேடவும் உதவுகிறது. இந்த வார இறுதிக்குள் ஸ்மார்ட் சாட்பாட் அனைவருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.