கிரிக்கெட் ரசிகர்களுக்கு டபுள் டமாக்காவாக IPL தொடர் முடிந்த சில நாட்களில் T20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 2 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அரங்கேற உள்ளது. இதற்காக இந்திய அணி தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் அணியக் கூடிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
அரண்மனை 4 படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் அடுத்த படம் என்ன?? வெளியான மாஸ் அப்டேட்!!
அதாவது புதிய ஜெர்சி வழக்கமான நீல நிறத்தில் இருந்தாலும் வித்தியாசமான டிசைனில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதை அணிந்து கொண்டு தான் இந்திய வீரர்கள் டி20 உலகக் கோப்பையில் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் புதிய ப்ளூ ஜெர்சியை அணிந்து செம கெத்தாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.