கடந்த 7 மாத காலமாக இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே கடும் மோதல் நிலவி வருவதால், காசா பகுதிகளில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்த்திற்கு, ஹமாஸ் அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் தகவல்!!
அதன்படி இஸ்ரேல் பிணைய கைதிகள் அனைவரையும் விடுவிக்க முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் இது தொடர்பாக இஸ்ரேல் தரப்பில் எவ்வித பதிலும் வெளிவரவில்லை. மாறாக காசா மீதான தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.