தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் பலரும் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க மழை பெய்யாதா என மிகவும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (மே 7) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை (மே 8) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை அறிவித்துள்ளது