IPL தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 55 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் மும்பை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக சதங்கள் (2) விளாசிய ரோகித் சர்மாவின் சாதனையை சமம் செய்துள்ளார். தற்போது இவருக்கு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.