தமிழகத்தில், 2023-2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாள் ஏப்ரல் 26ம் தேதி என அரசு அறிவித்து இருந்தது. இதனால், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே முடிந்த நிலையில், நேற்றுடன் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடந்து முடிந்தன.இந்த நிலையில் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ்அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
2024 TET தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கிய டிப்ஸ்., யூஸ் பண்ணிக்கோங்க!!!
அதில், மாணவர்களின் இடை நிற்றலை தவிர்க்கவும், கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்துக்கு குறையாமலும் ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் 9ம் வகுப்புக்கான தேர்ச்சி விதிகள் முடிவு செய்யப்பட்டு, தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து பள்ளிகளும் 6, 7, 8-ம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும்.