கர்நாடகாவில் 10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு போல, 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என அம்மாநில அரசு மும்முரமாக செயல்பட்டு வருகிறது. மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனியார் பள்ளி கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். அதில் 5, 8, 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது RTE சட்டத்திற்கு எதிரானது. எனவே தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர்.
இதன் காரணமாக வேறு பள்ளிகளுக்கு மாற நினைக்கும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (TC) மற்றும் மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை பெற்றோர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதாகவும் கவலை தெரிவித்து வருகின்றனர்.