தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன் சிலருக்கு மட்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கிய நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது. வருகிற ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும்.
இதன்பின் புதிதாக விண்ணப்பித்தவர்கள் 2.24 லட்சம் பேருக்கும் மீண்டும் விநியோகப் பணி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1,000 உரிமை தொகை திட்டம் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் தெரிவித்து வருகின்றனர்.