சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா உட்பட 26 நாடுகளில் 39 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்வு முடிவுகள் குறித்து பல்வேறு போலி தகவல்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் CBSE தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதாவது சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், மே 20ஆம் தேதிக்கு பின்னர் வெளியாகும். சமூக ஊடகங்களில் பரவும் போலியான அறிக்கைகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.