சமீபகாலமாக சென்னையில் வார இறுதி தோறும் புறநகர் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், பல்வேறு மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றும் (மே 18), நாளையும் (மே 19) சென்னை பீச் to தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதாக இரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் சென்னை கடற்கரை to தாம்பரம் இடையே செல்லும் 15 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் செங்கல்பட்டு to சென்னை பீச் வரை செல்லும் 8 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.