சிறகடிக்க ஆசை சீரியலில் இப்பொழுது ஜீவா வசமாக சிக்கிக்கொண்ட நிலையில் மனோஜ் மற்றும் ரோகிணி பணத்தை எப்படியோ வாங்கி கொண்டனர். அதுமட்டுமின்றி இதில் மறைமுகமாக முத்துவும் சம்பந்தப்பட்டு விட்டார். இதனால் கண்டிப்பாக ராகினிக்கு பிரச்சனை காத்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது.
இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்கள் என்றாலே அது முத்து, மீனா, விஜயா, ரோகிணி தான். ஏனெனில் ரோகினியை மலை போல நம்பி கொண்டிருக்கிறார் விஜயா. ஆனால் ரோகினியோ தனக்கு நடந்த கல்யாணத்தை மறைத்து வீட்டையே ஏமாற்றி வாழ்ந்து வருகிறார்.
CWC யில் மாதம்பட்டி ரங்கராஜன் வர முழுக்காரணம் இந்த பிரபலம் தானாம்.., இது என்ன புதுக்கதையா இருக்கு!!
இப்படி இருக்க இப்பொழுது ரோகினி கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மாவிற்கு சன் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சீரியலை விட்டு விலக மாட்டாராம். 2 சீரியல்களிலும் சேர்ந்து தான் நடிப்பாராம்.