மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
மக்களே உஷார்.. தமிழகத்தில் இந்த 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை தொடர்பாக ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு இன்று (மே 1) மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழக முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பாலை வீச கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here