நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வரை மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ள நிலையில் அது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மக்களவைக்கான முதல் கட்ட தேர்தலில் 66.14% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதை தொடர்ந்து 2ம் கட்ட தேர்தலில் 66.71% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து 24 மணி நேரத்திற்குள் இறுதி வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடும். ஆனால் தற்போது இந்த தாமதத்திற்கு காரணம் என்ன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.