ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரெய்சி, அணை திறப்பு நிகழ்ச்சிக்காக அண்டை நாடான அஜர்பைஜானுக்கு, கடந்த மே 19ம் தேதி சென்று இருந்தார். இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஈரானுக்கு புறப்பட்ட நிலையில், அஜர்பைஜான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜோல்பா நகர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இதில் ஈரான் அதிபர் ரைசி மட்டுமல்லாமல் அவருடன் சென்று இருந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1
அதிபர் உயிரிழந்த நிலையில் ஈரானில் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் ஈரானில் தேர்தல் நடத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும், அதன் முடிவில் வரும் ஜூன் 28ல் ஈரான் அதிபர் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரெய்சி உயிரிழந்த நிலையில், 50 நாட்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பது விதியாகும்.