சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண், பெண் இருவரும் இணைந்து வாழும் கலாச்சாரம் (லிவிங் டு கெதர்) அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரியை சேர்ந்த செவிலியர் பெண் ஒருவர், தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னையில் வசித்து வந்துள்ளார். 7 மாத கர்ப்பிணியான இப்பெண்ணுக்கு, திடிரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து தனக்குத் தானே பிரசவம் செய்ய முற்பட்ட போது, குழந்தையின் இரு கால்களையும் வெட்டி உள்ளார். இதன் காரணமாக குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. பின்னர் இறந்த குழந்தையுடன் எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil டெலிக்ராம்
TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50 வினாக்கள் | 50 MCQ’s Important General Tamil Questions