சமீபத்தில் மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில், பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்ற காட்சி, நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இதையடுத்து அந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி சிபிஐ விசாரணையில் பல அதிர்ச்சிக்குள்ளாக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
TNPSC பொதுத்தமிழ் : 30 நிமிடம் 50 வினாக்கள் | 50 MCQ’s Important General Tamil Questions
அதாவது மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்ட இரு பழங்குடி பெண்கள் காவல் வாகனத்தில் ஏறி உதவி கேட்டு உள்ளனர். வாகனத்தில் ஏற்றிய அப்பெண்களை, போலீசாரே வன்முறை கும்பலிடம் அழைத்துச் சென்று விட்டுள்ளதாக, சிபிஐ குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.